Saturday 18th of May 2024 05:00:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
148 பேரின் யாழ். ஆய்வு கூட கொரோனா பரிசோதனை முடிவுகள்!

148 பேரின் யாழ். ஆய்வு கூட கொரோனா பரிசோதனை முடிவுகள்!


யாழ். ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட 148 பேரின் பரிசோதனை முடிவுகள் சற்று முன்னதாக யாழ் போதனா வைத்தியசலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் இன்று (ஜூலை-15) மேற்கொள்ளப்பட்ட 148 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாற இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 148 பேரின் விபரங்கள் வருமாறு,

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 2 பேர்.

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 5 பேர்.

விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு - 98 பேர்.

பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் மையம் - 29 பேர்.

விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையம் - 9 பேர்.

பொது வைத்தியசாலை வவுனியா - 4 பேர்.

பொது வைத்தியசாலை மன்னார் - ஒருவர்

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE